கோவை கிணத்துக்கடவில் தனியார் பேருந்து படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கல்லூரி மாணவன் படுகாயம்..!

அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் போலீசில் புகார் அளித்தார்.


கோவை: கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் தனியார் பேருந்து படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கல்லூரி மாணவன் படுகாயம் அடைந்தார்.

உடுமலைப்பேட்டை இராவணபுரம் இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரின் மனைவி கனகமணி இவரது மகன் நந்தகுமார்(21) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 9ம் தேதி மாலை கோவையிலிருந்து உடுமலைக்கு தனியார் பேருந்தில் ஏறி வந்தார்.

கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் அருகே பேருந்து வந்து கொண்டிருக்கும்போது திடீரென படிக்கட்டு வழியாக நந்தகுமார் தவறி கீழே விழுந்தார்.

இதில் நந்தகுமாருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நந்தகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் நந்தகுமாரின் தாய் கலாமணி இன்று புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...