கோவை பைனான்ஸ் உரிமையாளர் கொலை வழக்கு - குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்...!

குற்றவாளிகளில் ஒருவரான ரங்கநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (19). பைனான்ஸ் கம்பனி நடத்தி வந்த இவர், கடந்த ஜனவரி 2021 ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழ்ச்செல்வன், ராஜராஜன் ஆகிய இருவர் சரணடைந்தனர்.

இந்நிலையில், தொழில் போட்டி காரணமாக, பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்களான இந்து முன்னனியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பரான ரங்கநாதன் இருவரும், சரவணனை வெட்டி கொலைச் செய்ய தூண்டியது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன், ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் என நான்கு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், ரங்கநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் ரங்கநாதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு நகல் ரங்கநாதனிடம் வழங்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...