கோவை பைனான்ஸ் உரிமையாளர் கொலை வழக்கு - குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்...!

குற்றவாளிகளில் ஒருவரான ரங்கநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (19). பைனான்ஸ் கம்பனி நடத்தி வந்த இவர், கடந்த ஜனவரி 2021 ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழ்ச்செல்வன், ராஜராஜன் ஆகிய இருவர் சரணடைந்தனர்.

இந்நிலையில், தொழில் போட்டி காரணமாக, பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்களான இந்து முன்னனியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பரான ரங்கநாதன் இருவரும், சரவணனை வெட்டி கொலைச் செய்ய தூண்டியது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன், ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் என நான்கு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், ரங்கநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் ரங்கநாதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு நகல் ரங்கநாதனிடம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...