அலுமினிய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கரவளி மாதப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அலுமினியத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கரவளி மாதப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அலுமினியத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து, சம்பத்குமார் என்ற விவசாயி கூறுகையில், தங்கள் பகுதிக்கு அலுமினிய ஆலை வரும் பட்சத்தில் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசடையும் எனவும், இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.

அலுமினிய ஆலைக்கு எதிராக ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர்களை வலியுறுத்திய நிலையில், அது தொடர்பான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



மேலும், கவுன்சிலர்கள் தங்களை சந்திக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் கூறிய மக்கள், இந்தப் பிரச்சினையில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...