அலுமினிய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கரவளி மாதப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அலுமினியத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கரவளி மாதப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அலுமினியத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து, சம்பத்குமார் என்ற விவசாயி கூறுகையில், தங்கள் பகுதிக்கு அலுமினிய ஆலை வரும் பட்சத்தில் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசடையும் எனவும், இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.

அலுமினிய ஆலைக்கு எதிராக ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர்களை வலியுறுத்திய நிலையில், அது தொடர்பான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



மேலும், கவுன்சிலர்கள் தங்களை சந்திக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் கூறிய மக்கள், இந்தப் பிரச்சினையில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...