தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் விவசாய சங்கத்தினர் 25-க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாகவும், விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலைகளும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், அதே போல விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய அனைத்து இயந்திரங்களின் வாடகைகளும், உயர்ந்துள்ளதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப்பொருள்களின் செலவும் அதிகரித்துள்ளது.
இது விவாசயத்தையும் விவசாயியும் பாதிக்கும் வண்ணம் விலை ஏற்றம் ஆனது அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளதால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் 25-க்கும் மேற்ப்பட்டோர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.