'டீ பிரியர்களுக்கு ஷாக்'... கோவையில் இன்று முதல் ஒரு டீ 15 ரூபாய்..!

மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தற்போதுள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று, பேக்கரி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இன்று முதல் டீ விலை 15 ரூபாயாக உயர்த்தப்படுவதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் அவசர கூட்டம், இதன் தலைவரும் அரோமா பேக்கரி உரிமையாளருமான பொன்னுசாமி தலைமையில் நடந்தது.

கே.ஆர்.பேக்கரி பாலன், கேரமல் பேக்கரி கார்த்திக், ராகம் பேக்கரி செல்வராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேக்கரி செலவினங்கள் அதிகரித்துள்ளது பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் விலை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீ விலையை உயர்த்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து தற்போதுள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை சமாளிக்க, டீ விலையை மட்டும் உயர்த்தலாம் என்று சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதன்படி ஒரு டீ 15 ரூபாய் என்ற விலை, இன்று முதல் கோவை மாவட்டத்தில் அமலில் இருக்கும், என்றார். இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...