மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தற்போதுள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று, பேக்கரி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இன்று முதல் டீ விலை 15 ரூபாயாக உயர்த்தப்படுவதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் அவசர கூட்டம், இதன் தலைவரும் அரோமா பேக்கரி உரிமையாளருமான பொன்னுசாமி தலைமையில் நடந்தது.
கே.ஆர்.பேக்கரி பாலன், கேரமல் பேக்கரி கார்த்திக், ராகம் பேக்கரி செல்வராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பேக்கரி செலவினங்கள் அதிகரித்துள்ளது பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் விலை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீ விலையை உயர்த்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து தற்போதுள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-
மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை சமாளிக்க, டீ விலையை மட்டும் உயர்த்தலாம் என்று சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதன்படி ஒரு டீ 15 ரூபாய் என்ற விலை, இன்று முதல் கோவை மாவட்டத்தில் அமலில் இருக்கும், என்றார். இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் அவசர கூட்டம், இதன் தலைவரும் அரோமா பேக்கரி உரிமையாளருமான பொன்னுசாமி தலைமையில் நடந்தது.
கே.ஆர்.பேக்கரி பாலன், கேரமல் பேக்கரி கார்த்திக், ராகம் பேக்கரி செல்வராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பேக்கரி செலவினங்கள் அதிகரித்துள்ளது பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் விலை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீ விலையை உயர்த்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து தற்போதுள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-
மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை சமாளிக்க, டீ விலையை மட்டும் உயர்த்தலாம் என்று சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதன்படி ஒரு டீ 15 ரூபாய் என்ற விலை, இன்று முதல் கோவை மாவட்டத்தில் அமலில் இருக்கும், என்றார். இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.