"ஆப்ரேஷன் 2.0" ஓட ஓட விரட்டி பிடிக்கப்படும் கஞ்சா வியாபாரிகள்.. கோவையில் ஒரே நாளில் 11-கஞ்சா வழக்குகள் பதிவு..!

மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 11-கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13-பேர் கைது - சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,"ஆப்ரேஷன் 2.0" என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் "ஆப்ரேஷன் 2.0" என்ற பெயரில் போலீஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகர் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில் நேற்று ஒரே நாளில் 11 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆர்.எஸ் புரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காளிதாஸ் (22) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல் பெரியார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுரேந்திரன் (26) என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர். மேலும் இரத்தினபுரி தபால் நிலையம் அருகே கஞ்சா விற்க முயன்ற கௌதம் (27) குணசேகரன் (29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் கஞ்சா விற்க முயன்ற மதன்குமார் (24) மற்றும் பாபு (25) ஆகிய இருவரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர். புளியகுளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கண்ணன் என்பவரையும் ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் மாரியம்மன் கோயில் வீதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருஞானம் (51) என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். நஞ்சுண்டாபுரம் நொய்யல் ஆறு ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் (32) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் குனியமுத்தூர் டாஸ்மாக் கடை உள்ளே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரியாசுதீன் (33) என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அதேபோல் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அபிஸ் (27) மற்றும் எஸ் ஹெச் எஸ் காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதிதன் (20) ஆகிய இருவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

சரவணம்பட்டி கீரணத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முனீஸ்வரன் (25) சரணம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவ்வாறு ஒரே நாளில் 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...