அடுத்தடுத்து தீ பிடிக்கும் 'இ-பைக்' : திருப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று இ-பைக் பேட்டரியில் இருந்து வந்த புகையால் பரபரப்பு..!

திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து அதிக புகை வந்ததால், தீயணைப்பு துறையினர் வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே ஓடிக்கொண்டிருந்த இ-பைக்கின் பேட்டரி திடீரென தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் அதிக புகை வருவதை பார்த்த பொதுமக்கள், அந்த வாகன ஒட்டியை வாகனத்தை நிறுத்தும்படி கூச்சலிட்டனர்.

அதை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி சென்ற நபர் உடனடியாக சாலையோரம், வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்து வைத்தார்.

பின்னர், அந்த பேட்டரியில் இருந்து அதிக அளவிலான புகை வெளியே வந்தபடி தீ பிடித்து எரிய துவங்கியது. பின்பு அங்கு வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



பெட்ரோலுக்கு மாற்றான எலக்டிட்ரிக் வாகனங்களை பலர் வாங்க நினைத்து வரும் நிலையில், அவ்வப்போதுபேட்டரி வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...