திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து அதிக புகை வந்ததால், தீயணைப்பு துறையினர் வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே ஓடிக்கொண்டிருந்த இ-பைக்கின் பேட்டரி திடீரென தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் அதிக புகை வருவதை பார்த்த பொதுமக்கள், அந்த வாகன ஒட்டியை வாகனத்தை நிறுத்தும்படி கூச்சலிட்டனர்.
அதை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி சென்ற நபர் உடனடியாக சாலையோரம், வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்து வைத்தார்.
பின்னர், அந்த பேட்டரியில் இருந்து அதிக அளவிலான புகை வெளியே வந்தபடி தீ பிடித்து எரிய துவங்கியது. பின்பு அங்கு வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பெட்ரோலுக்கு மாற்றான எலக்டிட்ரிக் வாகனங்களை பலர் வாங்க நினைத்து வரும் நிலையில், அவ்வப்போதுபேட்டரி வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.