கோவையில் விறகு அடுப்பில் சமையல் செய்த போது உடையில் தீ பிடித்து 83-வயது மூதாட்டி பலி..!

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சிறுமுகை அருகே விறகு அடுப்பில் சமைத்த போது, உடையில் தீ பிடித்து, 90-சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை சிறுமுகை இளகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி ராஜம்மாள் (83) இவர் தனது இளைய மகன் நாகராஜ் என்பருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் உடல் நலகுறைவால்மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜம்மாள் சுடுதண்ணீர் வைப்பதற்காக விறகு அடுப்பு பற்ற வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்ததாகத் தெரிகிறது. தீ மளமளவென உடல் முழுவதும் பிடித்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

ஆனால் 90 சதவீத தீக்காயங்களுடன் அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ராஜம்மாள் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...