கோவையில் விறகு அடுப்பில் சமையல் செய்த போது உடையில் தீ பிடித்து 83-வயது மூதாட்டி பலி..!

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சிறுமுகை அருகே விறகு அடுப்பில் சமைத்த போது, உடையில் தீ பிடித்து, 90-சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை சிறுமுகை இளகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி ராஜம்மாள் (83) இவர் தனது இளைய மகன் நாகராஜ் என்பருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் உடல் நலகுறைவால்மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜம்மாள் சுடுதண்ணீர் வைப்பதற்காக விறகு அடுப்பு பற்ற வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்ததாகத் தெரிகிறது. தீ மளமளவென உடல் முழுவதும் பிடித்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

ஆனால் 90 சதவீத தீக்காயங்களுடன் அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ராஜம்மாள் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...