கோவை துடியலூரில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலை, வனத்துறையினர் எடுத்துச் சென்று கோவை மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து எரியூட்டினர்.
கோவை: கோவை துடியலூரில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலை, வனத்துறையினர் எடுத்துச் சென்று கோவை மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து எரியூட்டினர்.
கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள் மயிலை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். கோவை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள சிறிய தகனம் செய்யும் இயந்திரம் மூலம் மயில் எரியூட்டப்பட்டது.

கோவையில் அதிகளவு மயில்கள் இறப்பதால் அடக்கம் செய்வதற்கான இடம் விரையம் ஆவதால் இந்த சிறிய அளவிலான தகனம் செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள் மயிலை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். கோவை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள சிறிய தகனம் செய்யும் இயந்திரம் மூலம் மயில் எரியூட்டப்பட்டது.
கோவையில் அதிகளவு மயில்கள் இறப்பதால் அடக்கம் செய்வதற்கான இடம் விரையம் ஆவதால் இந்த சிறிய அளவிலான தகனம் செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.