நடைபெறும் 14 வது கோவை விழாவையொட்டி, உக்கடம் வாலாங்குளத்தில் லேசர் விளக்கு கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கோவை: நடைபெறும் கோவை விழாவையொட்டி, உக்கடம் வாலாங்குளத்தில் லேசர் விளக்கு கண்காண்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

குளத்தில் உள்ள நீரைபல அடி தூரம் பீச்சி அடித்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வண்ண நிறங்களிலான லேசர் விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன.இதனை பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.நிகழ்ச்சியில்,தேசியபற்று பாடல்கள், திரைப்பட பாடல்கள் என பாடலுக்கு ஏற்றவாறு லேசர் விளக்குகளின் அசைவு இருந்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழ் கொஞ்சி விளையாடும் கோவையில், ஒரு வார காலம் மிக சிறப்பாக நடைபெறுகின்ற இந்த கோவை விழா நிகழ்வில் இன்று"லேசர் ஷோ" மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையின் ஒரு பரிணாம வளர்ச்சியாக, ஒட்டுமொத்தமாக கோவை மக்களுடைய ஒரு திருவிழாவாக இந்த கோவைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற இந்த கோவைவிழா, கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது, தற்போது, நோய் தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் கோவை விழா பிரம்மாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மருத்துவம், கல்வி , தொழில், மோட்டார் உற்பத்தி என அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன அழகு தமிழ் பேசும், கோவையில் மிகச் சிறப்பாக, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு வார கால திருவிழா ஒட்டுமொத்த கோவை மக்களின் திருவிழா.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள அனைத்து அமைப்புகளும் பாராட்டுக்கள். இந்த விழா மேலும் சிறப்படைய அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும், என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மேயர், துணை மேயர் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குளத்தில் உள்ள நீரைபல அடி தூரம் பீச்சி அடித்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வண்ண நிறங்களிலான லேசர் விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன.இதனை பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.நிகழ்ச்சியில்,தேசியபற்று பாடல்கள், திரைப்பட பாடல்கள் என பாடலுக்கு ஏற்றவாறு லேசர் விளக்குகளின் அசைவு இருந்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழ் கொஞ்சி விளையாடும் கோவையில், ஒரு வார காலம் மிக சிறப்பாக நடைபெறுகின்ற இந்த கோவை விழா நிகழ்வில் இன்று"லேசர் ஷோ" மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையின் ஒரு பரிணாம வளர்ச்சியாக, ஒட்டுமொத்தமாக கோவை மக்களுடைய ஒரு திருவிழாவாக இந்த கோவைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற இந்த கோவைவிழா, கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது, தற்போது, நோய் தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் கோவை விழா பிரம்மாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மருத்துவம், கல்வி , தொழில், மோட்டார் உற்பத்தி என அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன அழகு தமிழ் பேசும், கோவையில் மிகச் சிறப்பாக, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு வார கால திருவிழா ஒட்டுமொத்த கோவை மக்களின் திருவிழா.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள அனைத்து அமைப்புகளும் பாராட்டுக்கள். இந்த விழா மேலும் சிறப்படைய அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும், என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மேயர், துணை மேயர் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.