கோவை விழா: லேசர் விளக்குகளில் ஜொலித்த வாலாங்குளம்; அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, பாராட்டு.

நடைபெறும் 14 வது கோவை விழாவையொட்டி, உக்கடம் வாலாங்குளத்தில் லேசர் விளக்கு கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: நடைபெறும் கோவை விழாவையொட்டி, உக்கடம் வாலாங்குளத்தில் லேசர் விளக்கு கண்காண்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். 



குளத்தில் உள்ள நீரைபல அடி தூரம் பீச்சி அடித்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வண்ண நிறங்களிலான லேசர் விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன.இதனை பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.நிகழ்ச்சியில்,தேசியபற்று பாடல்கள், திரைப்பட பாடல்கள் என பாடலுக்கு ஏற்றவாறு லேசர் விளக்குகளின் அசைவு இருந்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 



இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழ் கொஞ்சி விளையாடும் கோவையில், ஒரு வார காலம் மிக சிறப்பாக நடைபெறுகின்ற இந்த கோவை விழா நிகழ்வில் இன்று"லேசர் ஷோ" மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையின் ஒரு பரிணாம வளர்ச்சியாக, ஒட்டுமொத்தமாக கோவை மக்களுடைய ஒரு திருவிழாவாக இந்த கோவைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



14 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற இந்த கோவைவிழா, கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது, தற்போது, நோய் தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் கோவை விழா பிரம்மாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 



மருத்துவம், கல்வி , தொழில், மோட்டார் உற்பத்தி என அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன அழகு தமிழ் பேசும், கோவையில் மிகச் சிறப்பாக, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு வார கால திருவிழா ஒட்டுமொத்த கோவை மக்களின் திருவிழா. 



இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள அனைத்து அமைப்புகளும் பாராட்டுக்கள். இந்த விழா மேலும் சிறப்படைய அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும், என்று அமைச்சர் தெரிவித்தார். 



இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மேயர், துணை மேயர் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...