ரயில் மோதி யானை இறக்கும் விவகாரம் - கோவையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு….!

கோவையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



ரயில் மோதி யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துள்ளது.



நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கி அமர்வு வழக்கை விசாரித்து வரும் நிலையில், தற்போது கோவை - பாலக்காடு ரயில்வே சாலையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகிய மூன்று நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்ட வனத்துறை மற்றும் பாலக்காடு ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் கலந்துரையாடி ஆய்வு செய்து வருகிறார். மொத்தம், மதுக்கரை - வாளையாறு இடையே யானைகள் உயிரிழந்த 6 இடங்கள் கண்டறியப்பட்டது. அந்த இடங்களிலும், நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



அதை தொடர்ந்து, வாளையாறு ரயில்நிலையம் அருகே, நீதிபதி குழுவினர், ரயில்வே துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...