கோவையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் மோதி யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துள்ளது.
நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கி அமர்வு வழக்கை விசாரித்து வரும் நிலையில், தற்போது கோவை - பாலக்காடு ரயில்வே சாலையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகிய மூன்று நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்ட வனத்துறை மற்றும் பாலக்காடு ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் கலந்துரையாடி ஆய்வு செய்து வருகிறார். மொத்தம், மதுக்கரை - வாளையாறு இடையே யானைகள் உயிரிழந்த 6 இடங்கள் கண்டறியப்பட்டது. அந்த இடங்களிலும், நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதை தொடர்ந்து, வாளையாறு ரயில்நிலையம் அருகே, நீதிபதி குழுவினர், ரயில்வே துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.