கோவை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி - நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபரீதம்…!

கோவை ஈச்சனாரி - மலுமிச்சம்பட்டி சர்வீஸ் சாலையில்  கொண்டிருந்த போது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி நாய் மீது மோதிய தமிழரசன் சாலையில் தூக்கி வீசப்பட்டு விழுந்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.


கோவை:கோவையில் அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லையால் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, சாலைகளில் குறுக்கே திடீரென நாய்கள் வருவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் இல்லை உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலை நிலவி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் படி, இரு நாட்களுக்கு முன் கோவையில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் தமிழரசன் (30). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் தங்கி எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தமிழரசன் பணியை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் ஈச்சனாரி - மலுமிச்சம்பட்டி சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென நாய் குறுக்கே வந்ததாக தெரிகிறது. 

இதில், நிலை தடுமாறி நாய் மீது மோதிய தமிழரசன் சாலையில் தூக்கி வீசப்பட்டு விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழரசன், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...