கோவையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கல்லூரிக்கு வந்த இளைஞர் மீது கன்டைனர் லாரி மோதி பலி.

கோவை மதுக்கரை நெஞ்சாலையில் இன்று மாலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுக்கரை போலீசார் விசாரணை.


கோவை: கோவை மதுக்கரை நெஞ்சாலையில் இன்று மாலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, விட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை, பாலத்துறை சாலை மார்பிள் கார்டனை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மகன் பிரிக்கிஸ்குமார்(22), ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று அக்கல்லூரியில் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ளகல்லூரிக்கு வந்த பிரிக்கிஸ்குமார், விழாவில் கலந்துக் கொண்டு,

பட்டம் பெற்றபின் மீண்டும் மாலை தனது இரு சக்கர வாகனத்தில், பாலக்காடு நெடுஞ்சாலை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அவர் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கன்டைனர் லாரி, பிரிக்கிஸ்குமார் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில், தூக்கிவீசப்பட்டஅவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் பிரிக்கிஸ்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...