'காச நோய் இல்லாத கோவை' - விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற அனைவரும் "TB Free COIMBATORE" என்ற டி.சர்ட் அணிந்தவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.



கோவை: காச நோய் ஒழிப்பு திட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



தேசிய காசநோய் தினம் மார்ச் மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி 30 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் காசநோய் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு பேரணி ஆகியவை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை அரசு அமல்படுத்தி அதற்காக 6,467 லட்சம் நிதியையும் ஒதுக்கி உள்ளது. காசநோய் இல்லாத 2025-ல் தமிழகம் என்ற இலக்கை எட்டும் விதமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்டத்தில்நடைபெற்றது. இந்த பேரணியைக் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்ட செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள், தனியார் அமைப்புகளும் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற அனைவரும் "TB Free COIMBATORE" என்ற டி.சர்ட் அணிந்தவாறு பேரணியில் கலந்து கொண்டனர். ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவில் அருகில் துவங்கப்பட்ட இந்த பேரணியானது ரேஸ் கோர்ஸ் சுற்றிலும் நடைபெற்றது.



இதில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மக்களுக்கு காச நோய் ஒழிப்பு திட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் பதாகைகளைக் கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...