கோவை, கரூர் என் இரு கண்கள் - கோவை கொடிசியா தொழில்துறை கண்காட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை கொடிசியாவில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறும் "பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் 2022" கண்காட்சிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: கோவை கொடிசியாவில் "பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் 2022" கண்காட்சிகள் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறுகின்றது.



இக்கண்காட்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி இன்று மாலை துவக்கி வைத்து பார்வையிட்டார்.



இந்த கண்காட்சியில் கட்டுமான பொருட்கள், மின்சார பொருட்கள், கட்டுமான எந்திரங்கள், வாகனங்கள், விவசாய எந்திரங்கள் என முன்னணி நிறுவனங்கள் முதல், வளர்ந்து வரும் நிறுவனங்களின் பொருட்கள் என 460 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.



இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், 12 மணி நேரம் தொழில் அமைப்பினருடன் இன்று பயணம் மேற்கொண்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பயனுள்ள நிகழ்வாக இது அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.



கோவை வரலாற்றில் எல்லாருக்கும் பயன் உள்ள கண்காட்சியாக இது அமையும். இங்கு கரூர் பகுதி மக்களும் வந்துள்ளதாக கூறிய அவர்,

முதல்வர் கோவைக்கு தனிக்கவனம் எடுத்து வருகிறார் என்றும் இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கரூரில் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், முதல்வர் வழிகாட்டுதலின்படி கோவை வந்துள்ளதாக கூறினார். கரூரும் கோவையும் தனக்கு இரண்டு கண்கள் போன்றவை, என தெரிவித்தார்.

கோவையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் வர்த்தகம் மூலம் பயன்பெற உள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



இவ்விழாவில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...