கோவை, கரூர் என் இரு கண்கள் - கோவை கொடிசியா தொழில்துறை கண்காட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை கொடிசியாவில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறும் "பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் 2022" கண்காட்சிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: கோவை கொடிசியாவில் "பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் 2022" கண்காட்சிகள் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறுகின்றது.



இக்கண்காட்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி இன்று மாலை துவக்கி வைத்து பார்வையிட்டார்.



இந்த கண்காட்சியில் கட்டுமான பொருட்கள், மின்சார பொருட்கள், கட்டுமான எந்திரங்கள், வாகனங்கள், விவசாய எந்திரங்கள் என முன்னணி நிறுவனங்கள் முதல், வளர்ந்து வரும் நிறுவனங்களின் பொருட்கள் என 460 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.



இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், 12 மணி நேரம் தொழில் அமைப்பினருடன் இன்று பயணம் மேற்கொண்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பயனுள்ள நிகழ்வாக இது அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.



கோவை வரலாற்றில் எல்லாருக்கும் பயன் உள்ள கண்காட்சியாக இது அமையும். இங்கு கரூர் பகுதி மக்களும் வந்துள்ளதாக கூறிய அவர்,

முதல்வர் கோவைக்கு தனிக்கவனம் எடுத்து வருகிறார் என்றும் இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கரூரில் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், முதல்வர் வழிகாட்டுதலின்படி கோவை வந்துள்ளதாக கூறினார். கரூரும் கோவையும் தனக்கு இரண்டு கண்கள் போன்றவை, என தெரிவித்தார்.

கோவையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் வர்த்தகம் மூலம் பயன்பெற உள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



இவ்விழாவில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...