கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - முன்னாள் ஆசிரியரை தேடி கேரளா விரைந்தது தனிப்படை…!

பள்ளிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த அதிகாரிகள் பள்ளி முழுவதும் சோதனையிட்ட போது வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் அது பொய்யான தகவல் என தெரியவந்தது.


கோவை: கோவை சூலூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஆசிரியரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் கத்தவாஞ்சாசவடி பகுதியை சேர்ந்தவர் கமலேசன் (39). இலங்கை தமிழர். இவர் கோவை ஆலாந்துறை பகுதியில் தங்கி சூலூர் முதலிபாளையம் பகுதியில் எல்லோ டிரெயின் ( Yellow Train) என்ற தனியார் பள்ளியில் ஜெர்மன் மொழி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கமலேசன் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகத் தெரிகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் அதே பள்ளியில் பணியாற்றிய வள்ளி என்ற முன்னாள் ஆசிரியருக்கு தொலைப்பேசியில் அழைத்து, இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வள்ளி உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் இதை கூறியுள்ளார். மேலும் சூலூர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த அதிகாரிகள் பள்ளி முழுவதும் சோதனையிட்டனர்.

அப்போது வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் அது பொய்யான தகவல் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கமலேசன் கேரளாவிலிருந்து செல்போன் மூலம் அழைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசிரியரைக் கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...