கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகளை மர நிழலில் அமர வைத்து போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.
கோவை: கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து போலீசார் அமரவைத்து அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.
கோவை மாநகரில் பெருகிவரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு, அதிகளவு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை சிக்னலில் ஹெல்மெட் அணியாமல், வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல், சிக்னலில் பச்சை, மஞ்சள் விளக்குகளைத் தாண்டி சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்த பின்னரும் சிக்னலில் நிற்காமல் வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை முறையாகக் கடை கடைப்பிடிக்காமல் சென்ற பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளைப் பிடித்து சிக்னல் அருகே மரநிழலில் இருக்கை போட்டு அமர வைத்து அவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.
போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் போலீசார்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாநகரில் பெருகிவரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு, அதிகளவு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை சிக்னலில் ஹெல்மெட் அணியாமல், வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல், சிக்னலில் பச்சை, மஞ்சள் விளக்குகளைத் தாண்டி சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்த பின்னரும் சிக்னலில் நிற்காமல் வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை முறையாகக் கடை கடைப்பிடிக்காமல் சென்ற பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளைப் பிடித்து சிக்னல் அருகே மரநிழலில் இருக்கை போட்டு அமர வைத்து அவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.
போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் போலீசார்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.