முருக்கம்பாடி என்ற பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார், நேரடியாக அந்த பழங்குடி கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை:கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராமத்தில் பாதியில் இடைநின்ற பழங்குடி கிராம பள்ளி மாணவர்களை கண்டறிந்து உதவும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக - கேரள எல்லையான,ஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் முருக்கம்பாடி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார், நேரடியாக அந்த பழங்குடி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு மொத்தம் எத்தனை பள்ளி மாணவர்கள் உள்ளனர், அதில் எத்தனை பேர் தங்கள் கல்வியை பாதியில் நிறுத்தி உள்ளனர், என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து, கல்வி கற்க வேண்டிய அவசியம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து போலீசார் பழங்குடி கிராம மக்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் தங்களது படிப்பை தொடர என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

இதையடுத்து, பழங்குடி கிராம மக்களுடன் காவல் துறையினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அப்போது, காவல்துறை சார்பில் தண்ணீர் டேங்க், போர்வைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்பழங்குடி மக்களுக்கு வழங்கினர்.
தமிழக - கேரள எல்லையான,ஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் முருக்கம்பாடி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார், நேரடியாக அந்த பழங்குடி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு மொத்தம் எத்தனை பள்ளி மாணவர்கள் உள்ளனர், அதில் எத்தனை பேர் தங்கள் கல்வியை பாதியில் நிறுத்தி உள்ளனர், என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து, கல்வி கற்க வேண்டிய அவசியம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து போலீசார் பழங்குடி கிராம மக்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் தங்களது படிப்பை தொடர என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.
இதையடுத்து, பழங்குடி கிராம மக்களுடன் காவல் துறையினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அப்போது, காவல்துறை சார்பில் தண்ணீர் டேங்க், போர்வைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்பழங்குடி மக்களுக்கு வழங்கினர்.