பழங்குடி கிராம மாணவர்கள் கல்வியை தொடர உதவும் காவல் துறை..!  கோவை சரக டிஐஜி முத்துச்சாமி விழிப்புணர்வு.

முருக்கம்பாடி என்ற பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார், நேரடியாக அந்த பழங்குடி கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை:கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராமத்தில் பாதியில் இடைநின்ற பழங்குடி கிராம பள்ளி மாணவர்களை கண்டறிந்து உதவும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக - கேரள எல்லையான,ஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் முருக்கம்பாடி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார், நேரடியாக அந்த பழங்குடி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அங்கு மொத்தம் எத்தனை பள்ளி மாணவர்கள் உள்ளனர், அதில் எத்தனை பேர் தங்கள் கல்வியை பாதியில் நிறுத்தி உள்ளனர், என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து, கல்வி கற்க வேண்டிய அவசியம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து போலீசார் பழங்குடி கிராம மக்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் தங்களது படிப்பை தொடர என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தனர். 



இதையடுத்து, பழங்குடி கிராம மக்களுடன் காவல் துறையினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அப்போது, காவல்துறை சார்பில் தண்ணீர் டேங்க், போர்வைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்பழங்குடி மக்களுக்கு வழங்கினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...