கோவையில் காணாமல் போன சிறுமிகளை கண்டு பிடித்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு..!

மாயமான சிறுமிகளை உடனடியாக தேடி கண்டு பிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.


கோவை: கோவையில் காணாமல் போன சிறுமிகளை துரிதமாகச் செயல்பட்டுக் கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 14-மற்றும் 17-வயது சிறுமிகள் இரண்டு பேர் நேற்று காலை தனது பாட்டி வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால் வெகுநேரமாகியும் வராததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர்.

புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு, சிறுமிகளைக் கண்டுபிடித்துப் பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.



மாயமான சிறுமிகளை உடனடியாக தேடி கண்டு பிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் காவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகளும் வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...