கோவை பாவனி நீர் பிடிப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலி - மது குடிக்க வனப்பகுதிக்கு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்…!

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: மது குடிக்க வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், பெத்திகுட்டை காப்புக்காடு அருகே பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக சிறுமுகை வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் சிறுமுகை ஆலக்கொம்பு, விஸ்கோஸ் காலணியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நவீன்குமார்(27) என்பது தெரியவந்தது.

நேற்று இரவு அவர் மது அருந்துவதற்காக பவானிசாகர் நீர்ப் பிடிப்பு பகுதிக்கு சென்று குடித்து விட்டு, மீண்டும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை நவீனை கீழே தள்ளி தலையில் மிதித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...