கோவை பாவனி நீர் பிடிப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலி - மது குடிக்க வனப்பகுதிக்கு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்…!

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: மது குடிக்க வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், பெத்திகுட்டை காப்புக்காடு அருகே பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக சிறுமுகை வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் சிறுமுகை ஆலக்கொம்பு, விஸ்கோஸ் காலணியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நவீன்குமார்(27) என்பது தெரியவந்தது.

நேற்று இரவு அவர் மது அருந்துவதற்காக பவானிசாகர் நீர்ப் பிடிப்பு பகுதிக்கு சென்று குடித்து விட்டு, மீண்டும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை நவீனை கீழே தள்ளி தலையில் மிதித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...