உணவருந்திய பணத்தை கேட்டதற்கு உணவகத்தின் மீது காலி மது பாட்டில்களை எறிந்து தாக்குதல் நடத்திய 3-இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 6-நபர்களைத் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் உணவருந்திய பணத்தை கேட்டதற்கு உணவகத்தின் மீது காலி மது பாட்டில்களை எறிந்து தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் தனியார் உணவகம் (ஸ்ரீ அபி ஹோட்டல்) ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த உணவகத்திற்கு பிரதீப்(22) என்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் உணவருந்தச் சென்றுள்ளார்.
அவர் மது போதையிலிருந்ததாக கூறப்படுகிறது. அவர் 520 ரூபாய்க்கு உணவருந்தி விட்டு 500 ரூபாய் மட்டுமே பணம் கொடுத்துள்ளார். மீதி 20 ரூபாயைக் கேட்டதற்கு தன்னிடம் இல்லை என்றும் ஏன் இதை வாங்கிக் கொள்ள முடியாதா எனவும் கூறி உணவகத்தின் காசாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து உணவகம் மூடப்படும் போது அந்த இளைஞர் மேலும் சில இளைஞர்களைக் கனரக வாகனத்தில் அழைத்து வந்து காலி மதுபாட்டில்களை கொண்டு உணவகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த உணவக உரிமையாளரின் காரையும் சேதப்படுத்தி உணவகத்திலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இதில் காசாளர் பழனிச்சாமிக்குக் காயங்கள் ஏற்பட அவரை சக உணவக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து காசாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் சம்பவத்தில் ஈடுபட்ட பிரதீப்(22), ஸ்ரீகிருஷ்ணேஷ்வரன்(21), அஜித் குமார்(22) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 6 நபர்களைத் தேடி வருகின்றனர்.
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் தனியார் உணவகம் (ஸ்ரீ அபி ஹோட்டல்) ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த உணவகத்திற்கு பிரதீப்(22) என்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் உணவருந்தச் சென்றுள்ளார்.
அவர் மது போதையிலிருந்ததாக கூறப்படுகிறது. அவர் 520 ரூபாய்க்கு உணவருந்தி விட்டு 500 ரூபாய் மட்டுமே பணம் கொடுத்துள்ளார். மீதி 20 ரூபாயைக் கேட்டதற்கு தன்னிடம் இல்லை என்றும் ஏன் இதை வாங்கிக் கொள்ள முடியாதா எனவும் கூறி உணவகத்தின் காசாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து உணவகம் மூடப்படும் போது அந்த இளைஞர் மேலும் சில இளைஞர்களைக் கனரக வாகனத்தில் அழைத்து வந்து காலி மதுபாட்டில்களை கொண்டு உணவகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த உணவக உரிமையாளரின் காரையும் சேதப்படுத்தி உணவகத்திலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இதில் காசாளர் பழனிச்சாமிக்குக் காயங்கள் ஏற்பட அவரை சக உணவக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து காசாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் சம்பவத்தில் ஈடுபட்ட பிரதீப்(22), ஸ்ரீகிருஷ்ணேஷ்வரன்(21), அஜித் குமார்(22) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 6 நபர்களைத் தேடி வருகின்றனர்.