கோவை காரமடையில் குடோனில் பதுக்கி வைத்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில்  ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை அதிக விலைக்கு கேரளாவிற்கு மர்ம நபர்கள் விற்பனை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் வகையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில்ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த குடோனில் சுமார் 49 பைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு தெரியவந்தது. மேலும், மற்றொரு அறையில் சுமார் 12 பைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் குடோனில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



பின்னர், அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த கணுவாய் சேர்ந்த மணிகண்டன் (36). காரமடை சேர்ந்த நந்தகுமார் (51). இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...