கோவையில் நடைபெறவுள்ள 'பில்ட் டெக் மற்றும் வாட்டர் இன்டெக் கண்காட்சி': 100 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்று கொடிசியா அமைப்பினர் நம்பிக்கை

11வது பில்ட் டெக் மற்றும் 2வது வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கொடிசியா சார்பில் ஆண்டுதோறும், "பில்ட் டெக், வாட்டர் இன்டெக், அக்ரி இன்டெக்", போன்ற கண்காட்சிகள் நடைபெற்று வந்தன. இதன் மூலம் கோவைக்கு பல புதிய நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிக்கு வந்ததோடு, கோவையை சேர்ந்த நிறுவனங்களுக்கும் கணிசமான வர்த்தகம் கிடைத்து வந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எந்த கண்காட்சிகளும் நடைபெறவில்லை. தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டிற்கான 11வது பில்ட் டெக் மற்றும் 2வது வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.



இது தொடர்பாக, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கொடிசியா வளாகத்தின் 4 அரங்குகளில் இக்கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இதில் பங்கேற்க முன்னணி நிறுவனங்கள் 460 ஸ்டால்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.



கடந்த முறை இன்டெக் கண்காட்சி மூலம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு கூடுதலாக வர்த்தகம் நடைபெறும் என நம்புவதாகவும், இக்கண்காட்சி மூலம் கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்று தெரிவித்தார். மேலும் கண்காட்சியில், ஜீரோ டிஸ்சார்ஜ் முறை, கட்டுமான தொழிலுக்கான கன ரக இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...