11வது பில்ட் டெக் மற்றும் 2வது வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.
கோவை: கோவை மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கொடிசியா சார்பில் ஆண்டுதோறும், "பில்ட் டெக், வாட்டர் இன்டெக், அக்ரி இன்டெக்", போன்ற கண்காட்சிகள் நடைபெற்று வந்தன. இதன் மூலம் கோவைக்கு பல புதிய நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிக்கு வந்ததோடு, கோவையை சேர்ந்த நிறுவனங்களுக்கும் கணிசமான வர்த்தகம் கிடைத்து வந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எந்த கண்காட்சிகளும் நடைபெறவில்லை. தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டிற்கான 11வது பில்ட் டெக் மற்றும் 2வது வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கொடிசியா வளாகத்தின் 4 அரங்குகளில் இக்கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இதில் பங்கேற்க முன்னணி நிறுவனங்கள் 460 ஸ்டால்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த முறை இன்டெக் கண்காட்சி மூலம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு கூடுதலாக வர்த்தகம் நடைபெறும் என நம்புவதாகவும், இக்கண்காட்சி மூலம் கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்று தெரிவித்தார். மேலும் கண்காட்சியில், ஜீரோ டிஸ்சார்ஜ் முறை, கட்டுமான தொழிலுக்கான கன ரக இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எந்த கண்காட்சிகளும் நடைபெறவில்லை. தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டிற்கான 11வது பில்ட் டெக் மற்றும் 2வது வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கொடிசியா வளாகத்தின் 4 அரங்குகளில் இக்கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இதில் பங்கேற்க முன்னணி நிறுவனங்கள் 460 ஸ்டால்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த முறை இன்டெக் கண்காட்சி மூலம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு கூடுதலாக வர்த்தகம் நடைபெறும் என நம்புவதாகவும், இக்கண்காட்சி மூலம் கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்று தெரிவித்தார். மேலும் கண்காட்சியில், ஜீரோ டிஸ்சார்ஜ் முறை, கட்டுமான தொழிலுக்கான கன ரக இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் கூறினார்.