மூன்று ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு தன்னார்வலர் கொண்ட குழுவினர் இன்று கோவை தாணிக்கண்டியில், அவுட்டுகாய் கடித்து வெடித்ததில் உயிரிழந்த யானை இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 யானைகள் உயிரிழந்ததுள்ள சம்பவத்தை ஆய்வு செய்ய, சிறப்பு குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த நிலையில், இன்று அந்த குழுவினர் யானை இறந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த 11 யானைகளில், அதிகளவு யானைகள் இளம் வயதுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. அதில், 2 யானைகள் இயற்கைக்கு முரணாக மின் வேலியில் சிக்கியும், அவுட்டு காய் வெடித்தும் உயிரிழந்தது, வனத்துறை மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டத்தில் 90 நாட்களில், 11 யானைகள் இறந்த சம்பவத்தை விசாரணை மற்றும் ஆய்வு செய்ய, கடந்த 31 ஆம் தேதி தமிழக அரசு மூன்று ஐ.எப்.எஸ் அதிகாரிகள், ஒரு தன்னார்வலர் அடங்கிய குழுவை நியமித்தது.
மேலும், இந்த குழு தமிழகம் முழுவதும், இயற்கைக்கு முரணாக உயிரிழக்கு யானைகள் குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடும், என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்குழுவினர் முதல் பணியாக இன்று கோவை தாணிக்கண்டியில், அவுட்டுகாய் கடித்து வெடித்ததில் காயமடைந்த 10 வயது பெண் யானை உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.