கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 யானைகள் உயிரிழப்பு - தமிழக அரசு அறிவித்த சிறப்பு குழு கோவையில் ஆய்வு

மூன்று ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு தன்னார்வலர் கொண்ட குழுவினர் இன்று கோவை தாணிக்கண்டியில், அவுட்டுகாய் கடித்து வெடித்ததில் உயிரிழந்த யானை இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 யானைகள் உயிரிழந்ததுள்ள சம்பவத்தை ஆய்வு செய்ய, சிறப்பு குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த நிலையில், இன்று அந்த குழுவினர் யானை இறந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த 11 யானைகளில், அதிகளவு யானைகள் இளம் வயதுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. அதில், 2 யானைகள் இயற்கைக்கு முரணாக மின் வேலியில் சிக்கியும், அவுட்டு காய் வெடித்தும் உயிரிழந்தது, வனத்துறை மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் 90 நாட்களில், 11 யானைகள் இறந்த சம்பவத்தை விசாரணை மற்றும் ஆய்வு செய்ய, கடந்த 31 ஆம் தேதி தமிழக அரசு மூன்று ஐ.எப்.எஸ் அதிகாரிகள், ஒரு தன்னார்வலர் அடங்கிய குழுவை நியமித்தது.

மேலும், இந்த குழு தமிழகம் முழுவதும், இயற்கைக்கு முரணாக உயிரிழக்கு யானைகள் குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடும், என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், அக்குழுவினர் முதல் பணியாக இன்று கோவை தாணிக்கண்டியில், அவுட்டுகாய் கடித்து வெடித்ததில் காயமடைந்த 10 வயது பெண் யானை உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...