உடல் உறுப்புகள் திருட்டு? கொலை மிரட்டல் விடுத்த தனியார் மருத்துவமனை? பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

தனது தாயின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக தான் அளித்த புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.



கோவை: உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாகத் தனியார் மருத்துவமனை மீது புகாரளித்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீணா தனது அம்மாவைக் கடந்த 2020-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரது தாயார் உயிரிழந்த நிலையில் தனது தாயாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது அம்மாவின் உடல் உறுப்புகளைத் திருடி விட்டதாகச் சந்தேகம் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். மேலும் இவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டம் நடத்தினர்.



இந்நிலையில் தான் அளித்த புகாருக்கு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தனது அம்மாவை அம்மருத்துவமனையினர் கொலை செய்து விட்டதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், உட்படப் பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அம்மருத்துவமனையிலிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...