உடல் உறுப்புகள் திருட்டு? கொலை மிரட்டல் விடுத்த தனியார் மருத்துவமனை? பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

தனது தாயின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக தான் அளித்த புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.



கோவை: உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாகத் தனியார் மருத்துவமனை மீது புகாரளித்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீணா தனது அம்மாவைக் கடந்த 2020-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரது தாயார் உயிரிழந்த நிலையில் தனது தாயாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது அம்மாவின் உடல் உறுப்புகளைத் திருடி விட்டதாகச் சந்தேகம் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். மேலும் இவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டம் நடத்தினர்.



இந்நிலையில் தான் அளித்த புகாருக்கு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தனது அம்மாவை அம்மருத்துவமனையினர் கொலை செய்து விட்டதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், உட்படப் பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அம்மருத்துவமனையிலிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...