'சின்ன வெங்காயம்' விலை வீழ்ச்சியால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

சின்ன வெங்காயத்தை மாலையாக கட்டி கழுத்தில் அணிந்து கொண்டு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.



கோவை: சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால்வேதனையடைந்த விவசாயிகள் உரிய விலைக்கு விற்க வழிவகை செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இன்றைய தினம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை பத்து ரூபாய்க்கு கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் தங்களுக்கு முதலீடு செய்த தொகை கூட கிடைப்பதில்லை எனக் கூறியும் சின்ன வெங்காய விவசாயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தருமாறும் கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் தலைவர்சு.பழனிச்சாமி தலைமையில் மனு அளிக்க வந்த அவர்கள் சின்ன வெங்காயத்தை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிவித்துக் கொண்டனர். மேலும் சின்ன வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தனர். எனவே மனு அளிக்க வந்த பொதுமக்கள் பலரும் சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர்.



இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு 70 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும் ஆனால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.



எனவே தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சின்ன வெங்காயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.





Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...