தமிழக அரசு சொத்து வரியை 150-சதவீதம் வரை உயர்த்தி உள்ளதால் அதிர்ச்சி: மறுபரிசீலனை செய்ய தொழில்துறையினர் கோரிக்கை..!

மிக அதிக வரி உயர்வு தொழில் துறையினருக்கு மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சொத்துவரி உயர்வு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளைத் தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1,200 சதுரடி முதல் 1,800 சதுர அடி வரை 100 சதவீத வரி உயர்வும்.

1801 சதுர அடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும் கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சொத்துவரி உயர்வு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான 'TANSTIA' துணைத்தலைவர், எஸ். சுருளிவேல் கூறியதாவது:-



கொரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தொழில்துறையினர் முழுமையாக மீண்டு வரவில்லை. குறிப்பாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ளன.

மூலப்பொருட்கள் விலை உயர்வு ஒட்டுமொத்த உற்பத்தி தொழில்துறையை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இத்தகைய நிலையில் தமிழ்நாடு அரசு சொத்து வரி உயர்வை மிக அதிக அளவு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் 28 ஆண்டுகளுக்குப் பின் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் 12 ஆண்டுகளில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மிக அதிக வரி உயர்வு தொழில் துறையினருக்கு மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் 'TACT' தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது:-



தமிழக அரசு சொத்து வரி 150% சதவீதம் வரை உயர்த்தி உள்ளதால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படும். கடந்த இரண்டு வருடங்களாக தொழில்துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாலும் தொழிலாளிகள் வேலை இழப்புகளுக்கு ஆளாகியும், வியாபாரிகள் கடுமையானவீழ்ச்சி கண்டு உள்ளதாலும்

மக்களின் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இந்த நிலையில் வீட்டு வரி உயர்வால் நகர் பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடியிருப்புகளுக்கான வாடகை உயர்த்தப்படும்.

இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். குடியிருப்புகள் மட்டுமின்றி வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் தொழில் துறையினருக்கும் வாடகை மிக அதிக அளவு உயர்த்தப்படும். எனவே நெருக்கடியில் உள்ள தொழில் துறையினருக்கு நிதி நெருக்கடி பிரச்சினை மேலும் அதிகரிக்கும். மக்களின் நலன் கருதி அரசு சொத்து வரி உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...