கோவையில் இந்திய ம‌ருத்துவ ச‌ங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு த‌ழுவிய‌ போராட்ட‌ம்..!

ம‌ருத்துவ‌ர்க‌ளை குற்ற‌வாளிக‌ளாக‌ ப‌திவு செய்யும் இந்திய‌ த‌ண்ட‌னை ச‌ட்ட‌த்தின் பிரிவுகளை மாற்ற‌ வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.



கோவை: கோவையில் இந்திய ம‌ருத்துவ ச‌ங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு த‌ழுவிய‌ போராட்ட‌ம் நடைபெற்றது.

ராஜ‌ஸ்தான் மாநில‌த்தில் டாக்ட‌ர் அர்ச்ச‌னா ச‌ர்மா ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிர‌ச‌வ‌த்திற்கு பின் அதிக‌ இர‌த்த‌போக்கு ஏற்பட்டது. ம‌ருத்துவ‌ர் எவ்வ‌ளவோ முய‌ன்றும் அந்த‌ பெண்ணின் உயிரைக் காப்ப‌ற்ற முடிய‌வில்லை.

இந்த‌ நிலையில், இற‌ந்த‌ பெண்ணின் உற‌வின‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் ம‌ற்றும் போராட்ட‌ம் ந‌ட‌த்தினர். காவ‌ல்துறை அதிகாரிக‌ள் ம‌ருத்துவ‌ர் மீது கொலை வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌ பின்ன‌ர் உட‌லை வாங்கி சென்றனர்.

ம‌ருத்துவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்யும் போது வ‌ழிமுறைக‌ளை க‌டைபிடிக்க‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்றம் அறிவுறுத்தியுள்ள‌து. ஆனால், காவ‌ல் துறை அதைக் க‌ருத்தில் கொள்ளாம‌ல் ந‌ட‌வ‌டிக்கை எடுத்துள்ளது. இத‌னால் ம‌னஉலைச்ச‌லும், வேத‌னையும் அடைந்த‌ ம‌ருத்துவ‌ர் அர்ச்ச‌னா த‌ற்கொலை செய்துகொண்ட‌ர். இதனால் நாடு முழுவ‌தும் ம‌ருத்துவ‌ர்கள் க‌டும் அதிர்ச்சியில் உள்ள‌ன‌ர்.

இதனால் இந்திய ம‌ருத்துவ ச‌ங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு த‌ழுவிய‌ போராட்ட‌ம் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவையில் காலை 8 ம‌ணிமுத‌ல் மாலை 6 ம‌ணி வ‌ரை அவ‌ச‌ர‌ம் இல்லாத ம‌ருத்துவ‌ ப‌ணிக‌ளை நிறுத்திவிட்டு பல்வேறு கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அவர்கள் பேசுகையில், ம‌ருத்துவ‌ சிகிச்சை அளித்த‌ ம‌ருத்துவ‌ர் ச‌ர்மா மீது தவ‌றான‌ வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌ காவ‌ல் துறை அதிகாரிக‌ள் மீது உட‌ன‌டியாக‌ கைது செய்து வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ வேண்டும். அவ‌ரின் குடும்ப‌த்திற்கு போதிய‌ இழ‌ப்பீடு வ‌ழ‌ங்க‌ வேண்டும். ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறையை த‌டுக்க‌வேண்டும்.



ம‌ருத்துவ‌ர்க‌ளை குற்ற‌வாளிக‌ளாக‌ ப‌திவு செய்யும் இந்திய‌ த‌ண்ட‌னை ச‌ட்ட‌த்தின் பிரிவுகளை மாற்ற‌ வேண்டும். மேலும் ம‌ருத்துவ‌ ப‌ணிக‌ளை ப‌ய‌மில்லாம‌ல் செய்ய‌வும், ம‌ருத்துவ‌துறை சார்ந்த‌ அறுவை சிகிச்சைக‌ளை த‌ய‌க்க‌ம் இல்லாமல் செய்ய‌ வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...