கோவை வால்பாறை அருகே நேற்று வனப்பகுதியில் காணாமல் போன பெண் தொழிலாளி மீட்பு..!

விறகு சேகரிக்க சென்ற அவர், வனப் பகுதிக்குள் திசைமாறி சென்றதையடுத்து, தற்போது வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வனப்பகுதியில் காணாமல் போன பெண் தொழிலாளி மீட்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து மதிய உணவு இடைவேளையில் விறகு சேகரிக்க சென்ற சந்திரா (53) என்ற பெண்ணை காணவில்லை.



இதையடுத்து, வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று மதியம் அந்தப் பெண் சின்னகள்ளாறு எஸ்டேட்பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் விறகு சேகரிக்க சென்று வழி தவறி, திசை மாறி, வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்து, வன பகுதிக்குள் நெடுந்தூரம் சென்று இரவு நேரத்தில் வன விலங்குக்கு பயந்து பெரிய பாறை இடுக்கில் படுத்து தூங்காமல் இருந்து காலையில் எழுந்து தண்ணீர் ஓடை செல்லும் வழியில் சென்று சின்னகள்ளாறு எஸ்டேட் பகுதிக்கு வனப் பகுதி வழியாக சென்று உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெண் ஒருவர் காணவில்லை என்ற தகவல் சின்னகள்ளாறு பகுதி பொது மக்களுக்கு தெரிந்ததால் அந்த பெண்ணை மீட்டு உணவு வழங்கி பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...