கோவை வால்பாறை அருகே நேற்று வனப்பகுதியில் காணாமல் போன பெண் தொழிலாளி மீட்பு..!

விறகு சேகரிக்க சென்ற அவர், வனப் பகுதிக்குள் திசைமாறி சென்றதையடுத்து, தற்போது வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வனப்பகுதியில் காணாமல் போன பெண் தொழிலாளி மீட்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து மதிய உணவு இடைவேளையில் விறகு சேகரிக்க சென்ற சந்திரா (53) என்ற பெண்ணை காணவில்லை.



இதையடுத்து, வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று மதியம் அந்தப் பெண் சின்னகள்ளாறு எஸ்டேட்பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் விறகு சேகரிக்க சென்று வழி தவறி, திசை மாறி, வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்து, வன பகுதிக்குள் நெடுந்தூரம் சென்று இரவு நேரத்தில் வன விலங்குக்கு பயந்து பெரிய பாறை இடுக்கில் படுத்து தூங்காமல் இருந்து காலையில் எழுந்து தண்ணீர் ஓடை செல்லும் வழியில் சென்று சின்னகள்ளாறு எஸ்டேட் பகுதிக்கு வனப் பகுதி வழியாக சென்று உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெண் ஒருவர் காணவில்லை என்ற தகவல் சின்னகள்ளாறு பகுதி பொது மக்களுக்கு தெரிந்ததால் அந்த பெண்ணை மீட்டு உணவு வழங்கி பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...