கோவை வால்பாறை அருகே நேற்று வனப்பகுதியில் காணாமல் போன பெண் தொழிலாளி மீட்பு..!

விறகு சேகரிக்க சென்ற அவர், வனப் பகுதிக்குள் திசைமாறி சென்றதையடுத்து, தற்போது வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வனப்பகுதியில் காணாமல் போன பெண் தொழிலாளி மீட்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து மதிய உணவு இடைவேளையில் விறகு சேகரிக்க சென்ற சந்திரா (53) என்ற பெண்ணை காணவில்லை.



இதையடுத்து, வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று மதியம் அந்தப் பெண் சின்னகள்ளாறு எஸ்டேட்பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் விறகு சேகரிக்க சென்று வழி தவறி, திசை மாறி, வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்து, வன பகுதிக்குள் நெடுந்தூரம் சென்று இரவு நேரத்தில் வன விலங்குக்கு பயந்து பெரிய பாறை இடுக்கில் படுத்து தூங்காமல் இருந்து காலையில் எழுந்து தண்ணீர் ஓடை செல்லும் வழியில் சென்று சின்னகள்ளாறு எஸ்டேட் பகுதிக்கு வனப் பகுதி வழியாக சென்று உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெண் ஒருவர் காணவில்லை என்ற தகவல் சின்னகள்ளாறு பகுதி பொது மக்களுக்கு தெரிந்ததால் அந்த பெண்ணை மீட்டு உணவு வழங்கி பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...