'திருநங்கையர் தினம்'- ஆடல் பாடலுடன் கோவையில் அசத்தல்..!

இதில் திருநங்கைகளை 'வாழவிடு' என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



கோவை: உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இன்று உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் கோவை மாவட்ட திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் (நடனம், கோலம், பேச்சுப்போட்டி, ஆடை அலங்கார அணிவகுப்பு, பாட்டுப் போட்டி) நடத்தப்பட்டன.



இதில் கலந்து கொண்ட 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாரம்பரிய ஆடை அணிந்து அணிவகுப்பும் நடனமும் நடத்தினர். இதில் திருநங்கைகளை வாழவிடு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



முன்னதாக திருநங்கைகள் அவர்களது கோரிக்கைகளை அலுவலர்களிடம் முன்வைத்தனர். மேலும் பல்வேறு அரசுத் திட்டங்கள் தங்களுக்குக் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிகழ்ச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா முன்னிலையில் நடைபெற்றது.





Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...