இதில் திருநங்கைகளை 'வாழவிடு' என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
கோவை: உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இன்று உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் கோவை மாவட்ட திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் (நடனம், கோலம், பேச்சுப்போட்டி, ஆடை அலங்கார அணிவகுப்பு, பாட்டுப் போட்டி) நடத்தப்பட்டன.
இதில் கலந்து கொண்ட 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாரம்பரிய ஆடை அணிந்து அணிவகுப்பும் நடனமும் நடத்தினர். இதில் திருநங்கைகளை வாழவிடு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருநங்கைகள் அவர்களது கோரிக்கைகளை அலுவலர்களிடம் முன்வைத்தனர். மேலும் பல்வேறு அரசுத் திட்டங்கள் தங்களுக்குக் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிகழ்ச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா முன்னிலையில் நடைபெற்றது.