கேஸ் விலையை உயர்த்தாதே, பெட்ரோல் விலை சதம் அடிச்சாச்சு அடுத்து என்ன...? போன்ற கண்டன பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை: இந்தியாவில் கடந்த சில தினங்களாகச் சமையல் எரிவாயு விலை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று காங்கிரஸ் கட்சியின் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கேஸ் சிலிண்டர்க்குபாடை கட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
"கேஸ் விலையை உயர்த்தாதே, பெட்ரோல் விலை சதம் அடிச்சாச்சு அடுத்து என்ன...? போன்றகண்டன பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.