கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்ட சில இஸ்லாமிய அமைப்புகள் முயற்சி: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்..!

ஹிஜாப் விவகாரம் முடிந்தும் இவர்கள் அதற்கு போராட்டங்கள் நடத்தி கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.



கோவை: கோவையில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த சில இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாகவும், காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கோரியும், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேற்கு மண்டல ஐஜி யிடம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், வருகின்ற 1-ம் தேதி அனைத்து ஜமாத் அமைப்புகளும் இணைந்து போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைச் சிலர் முற்றுகையிட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஹிஜாப் விவகாரம் முடிந்தும் இவர்கள் அதற்கு போராட்டங்கள் நடத்தி கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்தார். இது குறித்து ஐஜி யிடம் மனு அளித்துள்ளதாகவும் காவல்துறை இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் மீண்டும் ஒரு கலவரம் ஏற்படும் எனவும் கூறினார்.



மேலும் இந்துக்கள் மத்தியில் அவர்கள் குர்ஆன் அளிப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...