கோவை மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தல் : 5-தலைவர்களும் போட்டியின்றி தேர்வு..!

இதையடுத்து மண்டல தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டார்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன் வாழ்த்து கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்திற்கான தலைவர்களாக திமுக கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில், 96-வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 3-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயராக வெற்றிச் செல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.



இந்நிலையில் கோவை மாநகராட்சியில் மண்டல தலைவருக்கான தேர்தல் கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3-அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான வேண்டாளர்களை திமுக தலைமை கழகம் அறிவித்தது.



அதன் படி கோவையில் உள்ள 5-மண்டலங்களில், கிழக்கு மண்டல தலைவராக 52 -வது வார்டு திமுக கவுன்சிலர் லக்குமி இளஞ்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



அதே போல வடக்கு மண்டல தலைவராக 10-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஆட்டோ ஓட்டுநராகவும் உள்ள கதிர்வேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



தெற்கு மண்டல தலைவராக 95-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



மேற்கு மண்டல தலைவராக 36-வது வார்டு திமுக கவுன்சிலர் தெய்வானை தமிழ்மறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



மேற்கு மண்டல தலைவராக 42-வது வார்டு திமுக கவுன்சிலர் மீனா லோகு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜாகோபால் சுன்காரா வழங்கினார்.

இதையடுத்து மண்டல தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டார்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன் வாழ்த்து கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...