இதையடுத்து மண்டல தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டார்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன் வாழ்த்து கூறினார்.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்திற்கான தலைவர்களாக திமுக கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில், 96-வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 3-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயராக வெற்றிச் செல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் மண்டல தலைவருக்கான தேர்தல் கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3-அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான வேண்டாளர்களை திமுக தலைமை கழகம் அறிவித்தது.

அதன் படி கோவையில் உள்ள 5-மண்டலங்களில், கிழக்கு மண்டல தலைவராக 52 -வது வார்டு திமுக கவுன்சிலர் லக்குமி இளஞ்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதே போல வடக்கு மண்டல தலைவராக 10-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஆட்டோ ஓட்டுநராகவும் உள்ள கதிர்வேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தெற்கு மண்டல தலைவராக 95-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கு மண்டல தலைவராக 36-வது வார்டு திமுக கவுன்சிலர் தெய்வானை தமிழ்மறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கு மண்டல தலைவராக 42-வது வார்டு திமுக கவுன்சிலர் மீனா லோகு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜாகோபால் சுன்காரா வழங்கினார்.
இதையடுத்து மண்டல தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டார்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன் வாழ்த்து கூறினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில், 96-வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 3-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயராக வெற்றிச் செல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் மண்டல தலைவருக்கான தேர்தல் கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3-அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான வேண்டாளர்களை திமுக தலைமை கழகம் அறிவித்தது.
அதன் படி கோவையில் உள்ள 5-மண்டலங்களில், கிழக்கு மண்டல தலைவராக 52 -வது வார்டு திமுக கவுன்சிலர் லக்குமி இளஞ்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல வடக்கு மண்டல தலைவராக 10-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஆட்டோ ஓட்டுநராகவும் உள்ள கதிர்வேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தெற்கு மண்டல தலைவராக 95-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மேற்கு மண்டல தலைவராக 36-வது வார்டு திமுக கவுன்சிலர் தெய்வானை தமிழ்மறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மேற்கு மண்டல தலைவராக 42-வது வார்டு திமுக கவுன்சிலர் மீனா லோகு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜாகோபால் சுன்காரா வழங்கினார்.
இதையடுத்து மண்டல தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டார்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன் வாழ்த்து கூறினார்.