கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம், ஆர்.எஸ்.ரோடு பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2-வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2-வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு பகுதிகளிலுள்ள கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சிக்கலாம்பாளையம் ஆர்.எஸ் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் சிக்கலாம்பாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அருள்முருகன் வயது (52) என்பவர் கடையில் 15-பாக்கெட் புகையிலையும், ஆர்.எஸ். ரோட்டில் நடத்திய சோதனையில் சந்திரசேகரன் என்பவரது மளிகை கடையில் 13-பாக்கெட் என மொத்தம் 28-பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து 2-வியாபாரிகளிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.