கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை மீண்டும் படிக்க வலியுறுத்தியோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்ய போலீசார் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் போத்தனூர் சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை போத்தனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட போத்தனூர், ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைகளில், நடந்து வரும் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை, அடிதடி போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் அடிக்கு மாடி குடியிருப்பு அருகே, கக்கன் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மற்றும் பொதுமக்களை அழைத்து, இந்த சமூக விரோத செயல்களால் ஏற்படும் பிரச்சனைகள், இளைஞர்களின் எதிர்கால நிலைகள் குறித்து மாநகர போலீசார் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல, கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை மீண்டும் படிக்க வலியுறுத்தியோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
போத்தனூர் சரக உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போத்தனூர் ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர் தாமரை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை போத்தனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட போத்தனூர், ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைகளில், நடந்து வரும் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை, அடிதடி போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் அடிக்கு மாடி குடியிருப்பு அருகே, கக்கன் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மற்றும் பொதுமக்களை அழைத்து, இந்த சமூக விரோத செயல்களால் ஏற்படும் பிரச்சனைகள், இளைஞர்களின் எதிர்கால நிலைகள் குறித்து மாநகர போலீசார் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல, கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை மீண்டும் படிக்க வலியுறுத்தியோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
போத்தனூர் சரக உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போத்தனூர் ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர் தாமரை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.