கோவை வெள்ளலூரில் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் போலீஸ் - பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை மீண்டும் படிக்க வலியுறுத்தியோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்ய போலீசார் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் போத்தனூர் சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை போத்தனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட போத்தனூர், ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைகளில், நடந்து வரும் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை, அடிதடி போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் அடிக்கு மாடி குடியிருப்பு அருகே, கக்கன் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மற்றும் பொதுமக்களை அழைத்து, இந்த சமூக விரோத செயல்களால் ஏற்படும் பிரச்சனைகள், இளைஞர்களின் எதிர்கால நிலைகள் குறித்து மாநகர போலீசார் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதேபோல, கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை மீண்டும் படிக்க வலியுறுத்தியோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

போத்தனூர் சரக உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போத்தனூர் ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர் தாமரை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...