கோவை மாவட்டத்தில் அறப்போர் இயக்கம் வரும் ஞாயிறன்று துவக்கம்

கோவை மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நடக்கும் அனைத்து ஊழல்களையும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை.


கோவை: கோவை மாவட்டத்தில் அறப்போர் இயக்கத்தின் குழு வரும் ஞாயிற்றுக்கிழமை துவக்கப்படுகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அறப்போர் இயக்கம். ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குழுக்கள் அமைத்து செயல்பட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், முதல் மாவட்டக்குழு கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவக்கப்படுகிறது.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் கூறியதாவது:-

நாங்கள் கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களை வெளிக் கொண்டு வந்துள்ளோம். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்து செயல்பட முடிவு செய்து, முதல் கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை கோவையில் அறப்போர் இயக்கத்தின் மாவட்ட குழு துவக்க உள்ளோம்.

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் உட்பட பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

கோவை மாவட்டத்தில் குழுக்கள் அமைத்து செயல்பட உள்ள காரணத்தால் எதிர்வரும் நாட்களில் மழைநீர் வடிகால், குப்பை அகற்றுதல் என்பது உள்ளிட்ட மக்கள் தொடர்புடைய அனைத்து அத்தியாவசிய பணிகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து வெளிக்கொண்டு வருவோம்.

அதேபோல், கோவை மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நடக்கும் அனைத்து ஊழல்களையும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம்.

இதுதவிர நீர்நிலைகள் மீட்டெடுப்பது, அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த உதவி என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

கோவையை தொடர்ந்து அடுத்த வாரம் திருச்சியில் மாவட்ட குழு துவங்க உள்ளோம். படிப்படியாக பல்வேறு மாவட்டங்களிலும் குழுக்களை துவக்கி செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...