கோவை மாவட்டத்தில் அறப்போர் இயக்கம் வரும் ஞாயிறன்று துவக்கம்

கோவை மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நடக்கும் அனைத்து ஊழல்களையும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை.


கோவை: கோவை மாவட்டத்தில் அறப்போர் இயக்கத்தின் குழு வரும் ஞாயிற்றுக்கிழமை துவக்கப்படுகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அறப்போர் இயக்கம். ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குழுக்கள் அமைத்து செயல்பட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், முதல் மாவட்டக்குழு கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவக்கப்படுகிறது.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் கூறியதாவது:-

நாங்கள் கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களை வெளிக் கொண்டு வந்துள்ளோம். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்து செயல்பட முடிவு செய்து, முதல் கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை கோவையில் அறப்போர் இயக்கத்தின் மாவட்ட குழு துவக்க உள்ளோம்.

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் உட்பட பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

கோவை மாவட்டத்தில் குழுக்கள் அமைத்து செயல்பட உள்ள காரணத்தால் எதிர்வரும் நாட்களில் மழைநீர் வடிகால், குப்பை அகற்றுதல் என்பது உள்ளிட்ட மக்கள் தொடர்புடைய அனைத்து அத்தியாவசிய பணிகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து வெளிக்கொண்டு வருவோம்.

அதேபோல், கோவை மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நடக்கும் அனைத்து ஊழல்களையும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம்.

இதுதவிர நீர்நிலைகள் மீட்டெடுப்பது, அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த உதவி என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

கோவையை தொடர்ந்து அடுத்த வாரம் திருச்சியில் மாவட்ட குழு துவங்க உள்ளோம். படிப்படியாக பல்வேறு மாவட்டங்களிலும் குழுக்களை துவக்கி செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...