மேலும், பி ஏ பி காலனியில் ரூ.5 கோடி செலவில் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் பொட்டானிக்கல் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டார்.
கோவை: வால்பாறை நகராட்சி மூலம் ரூ.80 லட்சம் செலவில் கட்டிவரும் குடி தண்ணீர் தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பார்வையிட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக, வால்பாறை கூட்டுறவு காலனியில் ரூ.80 லட்சத்திற்கான இரண்டு குடிநீர் தொட்டி கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்த பின் வால்பாறை பகுதியில் வாழும் பொது மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஒருபோதும் ஏற்படாதவாறு ஒவ்வொரு தொட்டியும் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும்.
இந்த தண்ணீர் தொட்டி பணிகள் நடந்து வருவதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த நகராட்சி பொறியாளரிடம் பொது மக்களுக்கு எந்த வகையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு மிக விரைவாக சிறப்பான முறையில் பணிகளை முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பின்னர், பி ஏ பி காலனியில் ரூ.5 கோடி செலவில் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் பொட்டானிக்கல் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பூங்காவை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிருபர்களிடம் கூறினார்.
முன்னதாக, அவர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, அங்கு மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் கட்டும் இடத்தை பார்வையிட்டார். அவருடன் அண்ணா திமுக நகர செயலாளர் மயில் கணேசன், துணை செயலாளர் பொன் கணேஷ், சுடர் பாலு, சவுந்தர்ராஜ், செல்.கணேஷ், பாலு, சசி, லோகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக, வால்பாறை கூட்டுறவு காலனியில் ரூ.80 லட்சத்திற்கான இரண்டு குடிநீர் தொட்டி கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்த பின் வால்பாறை பகுதியில் வாழும் பொது மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஒருபோதும் ஏற்படாதவாறு ஒவ்வொரு தொட்டியும் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும்.
இந்த தண்ணீர் தொட்டி பணிகள் நடந்து வருவதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த நகராட்சி பொறியாளரிடம் பொது மக்களுக்கு எந்த வகையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு மிக விரைவாக சிறப்பான முறையில் பணிகளை முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பின்னர், பி ஏ பி காலனியில் ரூ.5 கோடி செலவில் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் பொட்டானிக்கல் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பூங்காவை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிருபர்களிடம் கூறினார்.
முன்னதாக, அவர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, அங்கு மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் கட்டும் இடத்தை பார்வையிட்டார். அவருடன் அண்ணா திமுக நகர செயலாளர் மயில் கணேசன், துணை செயலாளர் பொன் கணேஷ், சுடர் பாலு, சவுந்தர்ராஜ், செல்.கணேஷ், பாலு, சசி, லோகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.