கோவை வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டாத 32 கடைகளுக்கு சீல்..!

நகராட்சிக்கு சுமார் ரூ.6 கோடி வாடகை பாக்கி உள்ளதாகவும் தற்போது வரை ரூ.3 கோடியே 50 லட்சம் வரவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.


கோவை: கோவை வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு சொந்தமாக 300 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு 2018ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கடை வாடகை நகராட்சிக்கு கட்டாத காரணத்தினால் வாடகை செலுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது வரை வாடகை யாரும் கட்டாத சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து சீல் வைக்கப்பட்டது. அதன் பின் வாடகை செலுத்தாத கடைகள் நகராட்சிக்கு வாடகை செலுத்தப்பட்ட சூழ்நிலையில் இன்று வரை 32 கடைகள் வரை பணம் செலுத்தவில்லை.



இதனால், நகராட்சி ஆணையர் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பாதுகாப்பில் 32 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சுமார் 6 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும் தற்போது வரை 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வரவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதி உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தற்போது வரை வாடகை செலுத்தாத கடைகள் 32 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...