கோவை வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டாத 32 கடைகளுக்கு சீல்..!

நகராட்சிக்கு சுமார் ரூ.6 கோடி வாடகை பாக்கி உள்ளதாகவும் தற்போது வரை ரூ.3 கோடியே 50 லட்சம் வரவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.


கோவை: கோவை வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு சொந்தமாக 300 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு 2018ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கடை வாடகை நகராட்சிக்கு கட்டாத காரணத்தினால் வாடகை செலுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது வரை வாடகை யாரும் கட்டாத சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து சீல் வைக்கப்பட்டது. அதன் பின் வாடகை செலுத்தாத கடைகள் நகராட்சிக்கு வாடகை செலுத்தப்பட்ட சூழ்நிலையில் இன்று வரை 32 கடைகள் வரை பணம் செலுத்தவில்லை.



இதனால், நகராட்சி ஆணையர் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பாதுகாப்பில் 32 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சுமார் 6 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும் தற்போது வரை 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வரவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதி உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தற்போது வரை வாடகை செலுத்தாத கடைகள் 32 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...